மதன மோகினி – திகில் காம கதை

1996

akka, anni, anni kamakathai, anni tamil kathai, anni tamil sex story, Aunty, Best Tamil Sex Stories, Family

அந்த நள்ளிரவில், பெங்களூர் டூ ஹைதராபாத் ஹைவேயில் நான் தனியாக நின்றிருந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கும்மிருட்டு. மேலே இருந்த பவுர்ணமி நிலவின் மங்கலான வெளிச்சம் மட்டும் விதிவிலக்கு.

அவ்வப்போது வாகனங்கள் ஒளியை தெளித்தவாறு “க்யீயீயீங்ங்..” என்ற பெரும் சப்தத்துடன் அதிவேகத்தில் வந்து, பின் அதே வேகத்தில் பார்வையில் இருந்து மறைந்தன.

தவளைகள் என்று நினைக்கிறேன், “கிர்ர்ர்ர்க்க்க்.. கிர்ர்ர்ர்க்க்க்..” என்று கூச்சலிட்டுக்கொண்டே இருந்தன. முதுகுத்தண்டில் ஐஸ் வைத்தமாதிரி அந்த சூழ்நிலை எனக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

பக்கவாட்டில் திரும்பி பார்த்தேன். நான் வந்த கார் மரத்தில் மோதி நொறுங்கியிருப்பது நிலவு வெளிச்சத்தில் பளிச்சென்று தெரிந்தது. எனக்கு அந்த கார் மிகவும் பிடிக்கும். பிசினஸ் ஆரம்பித்து, என்னுடைய உழைப்பில் நான் வாங்கிய முதல் கார் அது. அதே பிசினஸ் விஷயமாக ஹைதராபாத் செல்லும் வழியில் இப்படி அந்த காரின் ஆயுள்காலம் முடிந்து போனது வருத்தமான விஷயம்.

மிகவும் ஒரு கஷ்டமான கோணத்தில் கார் அந்த மரத்தின் கிளைகளோடு மோதி சிக்கியிருந்தது. நான் கொண்டுவந்த செல்போன் கூட எதோ ஒரு இடுக்குக்குள்ளே சிக்கி தொலைந்து போயிருந்தது. என்னுடைய நிலையை மற்றவர்களுக்கு சொல்ல எந்த வழியும் இல்லாமல் தனியாக நின்றிருந்தேன். வாழ்க்கையில் முதன் முறையாக மிகவும் ஹெல்ப்லெஸ்ஸாக உணர்ந்தேன்.

உதவி கேட்பதற்காக சாலையில் போய் வந்து கொண்டிருந்த வாகனங்களின் குறுக்கே கையை நீட்டி மறித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் யாருக்குமே என் மீது இரக்கம் வரவில்லை. நான் ஒருவன் சாலையில் நின்று கொண்டிருப்பதாகவே யாரும் காட்டிக் கொள்ளவில்லை. வேகத்தை சிறிதும் குறைக்காமல் “சர்ர்.. சர்ர்.. சர்ர்..” என்று போய்க்கொண்டே இருந்தார்கள்.

எனக்கு எரிச்சலாக வந்தது. மனிதர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை குறைந்து போயிருப்பது தெளிவாக புரிந்தது.

ஒரு அரை மணி நேரம். நான் கையை ஆட்டி ஆட்டி களைத்துப் போனேன். அனைவரும் என் முகத்தில் பளீர் பளீர் என்று வெளிச்சத்தை தெளித்துவிட்டு, பட்டென்று கடந்து சென்றார்களே ஒழிய, ஒருவர் கூட என் மேல் பரிதாபப்பட்டு வண்டியை நிறுத்தவில்லை.

நொந்து போனேன். சாலையில் நட்டு வைக்கப்பட்டிருந்த மைல்கல் மீது பைத்தியம் பிடித்த மாதிரி அமர்ந்திருந்தேன். கழுத்து சுளுக்கிக்கொண்ட மாதிரி கடுமையாக வலித்தது. கைகளால் அழுத்தி பிடித்துக் கொண்டேன். அழவேண்டும் போல இருந்தது. அப்போதுதான் தூரத்தில் தெரிந்த அந்த வீட்டை கவனித்தேன்.

வீடு என்று கூட சொல்ல முடியாது. பங்களா என்று சொல்ல வேண்டும். இல்லை.. இல்லை.. அரண்மனை என்று சொல்லலாம்.. அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக, பழங்கால ஸ்டைலில் கட்டியிருந்தார்கள். உள்ளே இருந்து மஞ்சள் நிறத்தில் மங்கலாக வெளிச்சம் வெளியே கசிந்து கொண்டிருந்தது. உடனே எனக்கு பட்டென்று அந்த யோசனை தோன்றியது. அங்கு சென்று உதவி கேட்டால் என்ன..? ஒருவேளை அந்த வீட்டில் டெலிபோன் இருந்தால், யாருக்காவது போன் செய்து உதவி கேட்கலாமே..?

நான் பட்டென்று மைல் கல்லில் இருந்து குதித்து இறங்கினேன். அந்த பங்களா இருந்த திசையை நோக்கி இருளில் நடக்க ஆரம்பித்தேன். அந்த வீட்டிற்கு செல்லும் பாதை சரியாக இல்லை. இல்லையென்றால் நான் சரியான பாதையில் செல்லவில்லை எனலாம்.

வழிநெடுக புதர் மண்டிக்கிடந்தது. காட்டு முற்செடிகளும், கற்றாழை செடிகளும் எக்கச்சக்கமாய் வளர்ந்து, நிறைந்து கிடந்தன. வினோதமான கற்றாழை வாசனை, அந்த சூழ்நிலைக்கு ஒரு வித அமானுஷ்ய எபெக்டை கொடுத்தது. நான் முதுகுத்தண்டில் ஒரு வித பய சிலிர்ப்புடனே நடையை போட்டேன்.

மெல்ல மெல்ல முன்னேறினேன். முற்செடிகளில் மிதித்து விடாதவாறு, கவனமாக காலடிகளை எடுத்து வைத்து நகர்ந்தேன். சுற்றிலும் நிசப்தம். காய்ந்த சருகுகளில் நான் காலெடுத்து வைக்கும் “சர்ர்ரக்க்க்க்.. சர்ர்ரக்க்க்க்.. சர்ர்ரக்க்க்க்..” ஒலியையும், காட்டுத்தவளைகள் எழுப்பிய “கிர்ர்ர்ர்க்க்க்.. கிர்ர்ர்ர்க்க்க்.. கிர்ர்ர்ர்க்க்க்..” ஒலியையும் தவிர வேறு எந்த சப்தமும் இல்லை.

நிதானமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்த என் முன்னால் திடீரென்று அந்த ஆள் வந்து நின்றான். எங்கிருந்துதான் வந்தான் என்றே தெரியாத மாதிரி, அந்த ஆள் படக்கென்று வந்து நிற்க, நான் அப்படியே பதறிப் போனேன்.

வயதான ஆள். ஒரு ஐம்பது, அறுபது வயது இருக்கும். தலை, மீசை, தாடி எல்லாம் தும்பைப்பூ மாதிரி நரைத்துப் போயிருந்தன. அவனுடைய முகத்தில் ஒருவித அசாத்தியமான அமைதி. வாயில் பீடி புகைந்து கொண்டிருந்தது. துண்டோ, போர்வையோ போற்றி முக்காடு போட்டிருந்தான்.

பீடி வெளிச்சத்தில் அவனுடைய சலனமில்லாத, குத்திட்ட கண்கள் என் பார்வையில் பட்டபோது, எனக்கு உடலெல்லாம், “ஜிலீர்ர்ர்..” என்று ஒரு சிலிர்ப்பு..!! நடுங்கினேன்.

“இந்த நேரத்துல எங்க தம்பி போறீங்க..?” அந்த ஆள் ஒரு எந்திரம் போல உணர்ச்சியே இல்லாமல் கேட்டான்.

எனக்கு உடனே பேச்சு வரவில்லை. வாய் குழறியது. தட்டுத் தடுமாறி சொன்னேன்.

“அ..அது.. அது.. என் கார்.. கார் ஆக்சிடன்ட் ஆயிடுச்சு..!! ரோட்டுல போற கார், பஸ் யாரும் நிக்க மாட்டேன்றாங்க..!! அதான் அதோ ஒரு வீடு தெரியுதில்ல, அங்கே போய் ஏதாவது உதவி கேக்கலாம்னு போறேன்..!!”

அந்த ஆள் பொறுமையாக பின்னால் திரும்பி தூரத்தில் தெரிந்த வீட்டை பார்த்தான். அப்புறம் என் பக்கமாக திரும்பினான். அவனுடைய கண்கள் அப்படியே நிலைகுத்திப் போய் இருக்க, உதடுகளை மட்டும் கொஞ்சமாய் திறந்து சிரித்தான். என்னை மேலும் கீழும் ஒருமாதிரி ஏளனமாய் பார்த்தான். பின்பு அதே உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.

“உதவிதான..? போங்க.. கெடைக்கும்..!!”

சொல்லிவிட்டு அந்த ஆள் அசையாமல் அப்படியே நிற்க, நான் நகர்ந்து ஒதுங்கிக் கொண்டேன். தயங்கி தயங்கி அந்த ஆளை கடந்து நடந்தேன். எனக்கு உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்துப் போன மாதிரி ஒரு உணர்ச்சி. ஒரு பத்து பதினைந்து எட்டு எடுத்து வைத்ததும், மீண்டும் அந்த ஆளை திரும்பி பார்த்தேன். அந்த ஆள் இன்னும் அதே இடத்தில் அப்படியே அசையாமல் நின்றிருந்தான். அவனுடைய தலையை சுற்றி பீடி புகை குபுகுபுவென கிளம்பி, காற்றோடு கலந்துகொண்டிருந்தது. பார்த்த எனக்கு உடலில் ஒரு வித இனம்புரியாத சிலிர்ப்பு எழுந்து அடங்கியது. பட்டென்று திரும்பி, அந்த பங்களாவை நோக்கி வேகவேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

ஒரு பத்து நிமிடத்தில் அந்த வீட்டை அடைந்தேன். அருகில் வேறு எந்த வீட்டையும் காணோம். தனி வீடாக இருந்தது. சுற்றிலும் மின்சாரம் செத்துப் போய் இருள் மண்டிக் கிடந்தது. வீட்டுக்குள் மெழுகுவத்தி வெளிச்சம்தான் எரிந்தது. வீட்டை சுற்றி பத்தடி உயரத்திருக்கு காம்பவுண்டு சுவர். அதே உயரத்தில் பெரிய, இரும்பாலான கிரில் கேட். அந்த கிரில் கேட் எங்கும், பச்சையாய் கொடிகள் சுற்றி.. படர்ந்து.. சுருண்டு.. எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக தோன்றியது.. நிஜமாகவே உள்ளே யாராவது இருக்கிறார்களா..?

கொஞ்சம் தயங்கிய நான் பின்பு தைரியமாக உள்ளே நுழைந்தேன். கேட்டை திறந்து உள்ளே நுழைந்ததும், சில வவ்வால்கள் “படபடபட..” வென சிறகடித்து பறந்து சென்றன. கேட்டில் இருந்து பங்களாவின் கதவை அடையவே எனக்கு முழுதாக ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டது. அவ்வளவு தூரம். போகும்போது அந்த பங்களாவை விநோதமாய் பார்த்துக் கொண்டே சென்றேன். முழுவதும் கற்களால் கட்டப்பட்ட பழங்கால வீடு. சுற்றிலும் உயர உயரமாய் மரங்கள் அடர்த்தியாய் வளர்ந்திருந்தன. நான்கைந்து அடுக்குகள் கொண்ட பிரம்மாணடமான வீடு. அங்கங்கே சதுரம் சதுரமாக கண்ணாடி பதிக்கப்பட்டு இருந்தது. அந்த கண்ணாடி ஜன்னல்கள் வழியாக மெல்லிய மெழுகுவத்தி வெளிச்சம் வெளியே கசிந்து கொண்டிருந்தது. இங்கே டெலிபோன் எல்லாம் இருக்குமா..? சந்தேகம்தான் என்று தோன்றியது.

பங்களாவின் கதவை அடைந்தேன். கதவில் கைவைத்து “டொக் டொக்.. டொக்.. டொக்..” என்று தட்டினேன். உள்ளே இருந்து ஒரு சத்தத்தையும் காணோம். ஒரு பத்து வினாடிகள் காத்திருந்து விட்டு மீண்டும், டொக்.. டொக்.. டொக்கினேன்.. இப்போது உள்ளே இருந்து சத்தம் கேட்டது. “ஜல்ல்ல்.. ஜல்ல்ல்.. ஜல்ல்ல்..” என்ற ஒரு பெண்ணின் கொழுசு ஒலி.. முதலில் தூரமாய் கேட்ட சப்தம், பின்பு மெல்ல மெல்ல அருகில் வந்தது.. அந்தப் பெண் கதவை நெருங்குவது புரிந்தது. கதவின் தாழ் நீக்கப்படும் சப்தம். பின்பு “க்றீச்ச்..” என்ற காதை கிழிக்கும் ஒலியுடன் கதவு திறந்து கொண்டது. நான் ஆர்வமாக உள்ளே பார்வையை வீசினேன்.

அவள் நின்றிருந்தாள். அடர்சிவப்பு நிறத்தில் பட்டுப்புடவை அணிந்திருந்தாள். கை, கால், இடுப்பு, கழுத்து, நெற்றி என்று நிறைய நகைகள் அணிந்திருந்தாள். தலையில் சரம் சரமாய் மல்லிகைப்பூ சூடியிருந்தாள். அவள் கையில் வைத்திருந்த திரி விளக்கு, அவளுடைய முகத்தை மிகவும் பிரகாசமாக காட்டியது. அவள் முகத்தை ஏறிட்ட நான், அவளுடைய அசத்தும் அழகில் அப்படியே சொக்கிப் போனேன்.

இந்த பாழடைந்த பங்களாவுக்குள் இப்படி ஒரு பேரழகியா..? தரையில் வந்து துடிக்கும் மீன்களை போல என்ன ஒரு கண்கள், உருண்டையாய், கூர்மையாய் என்ன ஒரு நாசி, பவளத்தை பிளந்து வைத்தாற்போல என்ன ஒரு அதரங்கள், வலம்புரி சங்கை நினைவுபடுத்தும் என்ன ஒரு கழுத்து, கோவில் சிலைகளை ஞாபகம் கொள்ள செய்யும் என்ன ஒரு தேகக்கட்டு..!!

அவளுடைய அழகு தந்த அதிர்ச்சியில் நான் பேச மறந்து நிற்க, அவளே கேட்டாள்.

“யார் நீங்க..? என்ன வேணும்..?”

“நா.. நான்.. நான் பெங்களூர்ல இருந்து வர்றேன்..!! ஐ ஆம் எ பிசினஸ்மேன்..”

“ம்ம்..”

“நான் ஓட்டிட்டு வந்த கார், மரத்துல மோதி ஆக்சிடன்ட் ஆயிடுச்சு..!! ரோட்ல போற யாரும் எனக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன்றாங்க..!! அதான் உங்ககிட்ட ஹெல்ப் கேக்கலாம்னு வந்தேன்..!!”

நான் சொல்லி முடிக்கும் முன்பே அவளுக்கு ஒரு மாதிரி சிரிப்பு வந்தது. கையால் வாயை மூடி சிரிப்பை அடக்கிக் கொள்வது மாதிரி தோன்றியது. எனக்கு அது சற்று எரிச்சலை ஏற்படுத்தியது.

“சிரிச்சீங்களா..?” என்றேன்.

“ம்ஹூம்..!! இல்லையே. ம்ம்.. மேல சொல்லுங்க..!!”

நான் கொஞ்ச நேரம் அவளுடைய முகத்தை பார்த்துவிட்டு, அப்புறம் தொடர்ந்தேன்.

“நீங்க எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா..?”

“என்ன ஹெல்ப் எதிர்பார்க்குறீங்க..?” அவள் அழகாக புன்னகைத்தபடி கேட்டாள்.

“இங்க.. இங்க டெலிபோன் இருக்கா..? ஒரு போன் பண்ணனும்..”

“டெலிபோன் இருக்கு.. ஆனா வேலை செய்யாது..!!”

“ஏன்..?”

“தெரியலை.. டெலிபோன் டிப்பார்ட்மென்ட் காரங்களத்தான் கேக்கணும்..!!”

“இந்த ஏரியாவுல சுத்தமா கரன்ட்டே இல்லாத மாதிரி இருக்கே..? எப்பவுமே இப்படித்தானா..?”

“தெரியலை.. எலக்ட்ரிசிட்டி டிப்பார்ட்மென்ட் காரங்களத்தான் கேக்கணும்..!!”

அவள் ஒருமாதிரி கேலியாக சொன்னாள். நான் சற்று எரிச்சலானேன். கேலி பேசுபவளிடம் வேறு என்ன கேட்பது என்று குழம்பிக் கொண்டு இருக்கும்போது அவளே சொன்னாள்.

“ஏன் வெளிலேயே நிக்குறீங்க..? உள்ள வாங்க..!!”

“இல்லைங்க பரவால்லை..” நான் தயங்க,

“பரவால்லை.. உள்ள வாங்க.. ரொம்ப தூரம் கஷ்டப்பட்டு நடந்து வந்திருப்பீங்க.. குடிக்க ஏதாவது தர்றேன்..!!”

“ஐயயோ.. அதெல்லாம் ஒன்னும் வேணாங்க.. உங்களுக்கு எதுக்கு சிரமம்..?”

“சிரமம்லாம் ஒன்னும் இல்லை.. இட்ஸ் ஓகே.. கம் இன்..!!”

நான் தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தேன். உள்ளே கிடந்த சோபாவில் அமர சொன்னாள். அமர்ந்து கொண்டேன். அவள் உள்ளே சென்றாள். நான் வீட்டை சுற்றி முற்றி பார்த்தேன். மிகவும் வசதியான வீடு. வீடு முழுவதும் பெரிய பெரிய ஓவியங்களும்.. சாண்டலியர் விளக்குகளும்.. அங்கங்கே ஏற்றப் பட்ட பெரிய சைஸ் மெழுகுவர்த்திகளும்.. அந்த மங்கலான வெளிச்சத்திலேயே என்னால் அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை முழுவதுமாய் உணர்ந்து கொள்ள முடிந்தது. வீட்டில் அவளை தவிர வேறு யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. வியப்பாக இருந்தது.

கொஞ்ச நேரத்திலேயே அவள் கையில் ஒரு கோப்பையுடன் வெளியே வந்தாள். என்னிடம் நீட்டினாள். சுட சுட இருந்தது. காபி என்று நினைத்து வாயில் வைத்து உறிஞ்சினேன். சுவையாக இருந்தது. ஆனால் காபி இல்லை என்று புரிந்தது. கோப்பைக்குள் குனிந்து பார்த்தேன். கருப்பு நிறத்தில், திக்காக இருந்தது அந்த பானம்.

“காபி இல்லையா..? என்ன இது..?” நான் குழப்பமாக அவளை கேட்க, அவள் சிரித்தாள்.

“என்னனு தெரியலையா..? கண்டுபிடிங்க பாப்போம்..!!”

நான் சற்று யோசித்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை.

“தெரியலைங்க.. நீங்களே சொல்லுங்களேன். என்னது..?”

“என்னவா இருந்தா என்ன..? டேஸ்ட் புடிச்சிருக்கில்ல..?”

“ம்ம்.. புடிச்சிருக்கு..!!”

“அப்ப சாப்பிடுங்க..!!”

நான் கப்பை உறிஞ்ச ஆரம்பித்தேன். அவள் முகத்தில் புன்னகையுடனே என்னை பார்த்துக் கொண்டிருந்தாள். நான் உறிஞ்சிக் கொண்டே மெல்ல கேட்டேன்.

“உங்க பேர் என்னனு தெரிஞ்சுக்கலாமா..?”

“எதுக்கு கேக்குறீங்க..?”

“சும்மாதான். புடிக்கலைன்னா விட்டுடுங்க..!!”

“அப்டிலாம் ஒன்னும் இல்லை..!! அப்பா அம்மா வச்ச பேர் கொஞ்சம் நீளம், எல்லாரும் சுருக்கமா சுந்தரினு கூப்பிடுவாங்க..!!”

“ஓ..!! சுந்தரி..!! நல்லாருக்கு பேர்..!! ம்ம்ம்ம்.. நீங்க.. இந்த வீட்ல.. நீங்க மட்டும் தனியாவா இருக்கீங்க..?”

“ஆமாம்.. ஏன் கேக்குறீங்க..?”

“உங்களுக்கு பயமா இல்லை..?”

நான் சொன்னதும் அவள் “கலகலகல” வென விழுந்து விழுந்து சிரித்தாள். “பயமா.. எனக்கா..?” என்று என்னை பார்த்து ஒரு மாதிரி கேலியாக, கைநீட்டி கைநீட்டி சிரித்தாள்.

அமைதியாய் இருந்த அந்த பிரதேசத்தை அவளுடைய சிரிப்பொலி ஜிலீர்.. ஜிலீர்.. என்று வன்மையாக தாக்கியது. அவள் அந்த மாதிரி சிரிப்பது எனக்கு ஒருவித கிலியை ஏற்படுத்தியது. முதுகுத்தண்டு ஒருமுறை ஜிவ்வென்று.. சிலிர்த்து அடங்கியது.

“இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க..?”

“ம்ம்ம்.. ஒன்னும் இல்லை.. எனக்கு பயமெல்லாம் கிடையாது.. நான் ரொம்ப தைரியமானவ..!! வேணும்னா நீங்க என் தைரியத்தை டெஸ்ட் பண்ணி பாக்கலாம்.. கொஞ்சம் என் மேல கை வச்சு பாருங்க ..!!” அவள் சிரிப்பு கொஞ்சம் கூட குறையாமல் அப்படி சொல்ல, எனக்கும் சிரிப்பு வந்தது.

“என்னங்க நீங்க..? நான் சும்மா பேச்சுக்கு கேட்டேன்.. அதுக்கு போய் மேல கை வைக்க சொல்றீங்களே..?”

“ம்ம்.. அப்போ உங்களுக்கு பயம்.. எனக்கு பயம் இல்லைன்னு ஒத்துக்குங்க..!!”

“ஒத்துக்குறேன்.. எனக்கு பயம்தான்..!!” என்று கைகள் ரெண்டையும் தூக்கி ஒத்துக் கொண்டேன். புன்னகைத்தவாறே அவளுடைய குழந்தைத்தனமான அழகு முகத்தையே கொஞ்ச நேரம் ஆசையாக பார்த்தேன். பிறகு கொஞ்சம் தயங்கிவிட்டு சொன்னேன்.

“ஒன்னு சொன்னா தப்பா நெனைக்க மாட்டீங்களே..?”

“ம்ம்.. சொல்லுங்க..!!”

“நீங்க.. நீங்க.. ரொம்ப அழகா இருக்கீங்க..!!”

“ம்ம்.. நெஜமா..?”

“சத்தியமா.. நான் நெறைய அழகான பொண்ணுங்களை பாத்திருக்கேன்..!! ஆனா.. ஆனா.. உங்களை மாதிரி ஒரு அழகியை நான் பாத்ததே இல்லை..!! அப்டியே தேவதை பூமில இறங்கி வந்த மாதிரி இருக்கீங்க..!!”

அவள் அதற்கும் “கலீர்.. கலீர்..” என பற்களை காட்டி பெரிதாக சிரித்தாள்.

“ம்ம்.. தேங்க்ஸ்..!! நீங்களும் பாக்குறதுக்கு ஸ்மார்ட்டாதான் இருக்கீங்க..!!” என்றாள்.

“பொய்..!!”

“நெஜமாதாங்க..!!”

“ம்ம்.. ஓகே.. தேங்க்ஸ்..!!”

நான் அவளுடைய கண்களை பார்த்து சொல்ல, அவளும் என் கண்களையே பார்த்தாள். கொஞ்ச நேரம் இருவரும் அதே மாதிரி ஒருவரை ஒருவர் வித்தியாசமாய் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்புறம் காலி கப்பை, டீப்பாய் மேல் கிடந்த நியூஸ் பேப்பரில் வைத்துக் கொண்டே நான் சொன்னேன்.

“சரிங்க.. உங்க உபசரிப்புக்கு ரொம்ப தேங்க்ஸ்.. நான் கெளம்புறேன்..!!”

“எங்க போறீங்க..?”

அவள் பட்டென்று கேட்க, எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. ஆமாம்.. எங்கு போவது..? நான் திணறிக்கொண்டு இருக்கும்போது அவளே தொடர்ந்தாள்.

“மறுபடியும் ரோட்ல போய் நின்னுக்கிட்டு.. கையை காலை தூக்கி டான்ஸ் ஆடப் போறீங்களா..?”

“வேற என்ன பண்றது..? ஏதாவது ஹெல்ப் கெடைக்குதான்னு பாக்க வேண்டியதுதான்..!!”

“நான் ஒரு யோசனை சொல்றேன்.. கேக்குறீங்களா..?”

“என்ன..?”

“நைட்டு இங்கேயே தங்கி இருந்துட்டு.. காலைல போய் ஏதாவது ஹெல்ப் கெடைக்குதான்னு பாக்கலாமே..?”

எனக்கும் அந்த யோசனை சரியாக தோன்றியது. ஒருத்தனும் நிக்க மாட்டேன் என்கிறான். அங்கே போய் இரவு முழுவதும் என்ன செய்வது..? பேசாமல் இங்கே தங்கிவிட்டு காலையில் செல்லலாமே..? ஆனால்.. ஆனால்.. இவளுக்கு..?

“என்ன யோசிக்கிறீங்க..?” அவள் கேட்க,

“இல்லை.. நான் தங்குறதுல.. உங்களுக்கு ஏதாவது..?”

“ஒரு ப்ராப்ளமும் இல்லை.. தாராளமா தங்கலாம்..!! உள்ள வாங்க..!!”

அவள் அந்த திரி விளக்கை எடுத்துக் கொண்டாள். உள்ளறைக்குள் நடக்க ஆரம்பித்தாள். நான் அவளை பின் தொடர்ந்தேன். அமைதியான அந்த பெரிய ஹாலில், “ஜல்ல்.. ஜல்ல்.. ஜல்ல்..” என கொலுசொலி கிளம்ப, அவளுடைய முகத்தை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டும் விளக்கோடு அவள் நடந்து சென்றதை பார்க்க, கொஞ்சம் பயமாயிருந்தது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் பின்னால் நடந்தேன். ஹாலின் அடுத்த மூலையில் இருந்த மாடிப்படியில் ஏறி மேலே சென்றாள். நானும் படி ஏறினேன்.

மாடியில் வரிசையாக பெரிய பெரிய அறைகள். ஒரு ஆறடி அகலத்துக்கு விசாலமான வராண்டா. அப்புறம் கைப்பிடி சுவர். மேலே இருந்து ஹாலை தெளிவாக பார்க்குமாறு அமைக்கப்பட்டிருந்தது. வராண்டாவில் ஜல் ஜல்லென்று நடந்து சென்றவள் ஒரு அறையின் முன்னால் நின்றுகொண்டாள். கதவை தள்ளி திறந்துவிட்டாள்.

“ம்ம்.. இங்க நீங்க தங்கிக்கலாம்..!!” என்றாள்.

“ரொம்ப தேங்க்ஸ்ங்க.. இந்த ஹெல்ப்பை நான் மறக்க மாட்டேன்..!!”

“பரவால்லை.. காலைல பாப்போம்..!! ரெஸ்ட் எடுங்க..!!” சொல்லிவிட்டு திரும்பியவள், அப்படியே நின்றாள். பின்பு எதோ ஞாபகம் வந்தவளாய் திடீரென்று கேட்டாள்.

“ஆமாம்.. நீங்க உங்க பேரே சொல்லலையே..? உங்க பேரு என்ன..?”

“என் பேர் அசோக்..!!” நான் புன்னகைத்தவாறே சொன்னேன்.

அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் அவளுடைய முகத்தில் தவழ்ந்திருந்த அழகு புன்னகை பட்டென்று காணாமல் போனது. முகத்தில் ஒருவித சோகம் வந்து குடிகொண்டது. என்னுடைய முகத்தையே ஒரு மாதிரி ஆச்சரியமும், ஏக்கமும், பரிதாபமும், காதலும் கலந்த ஒரு பார்வை பார்த்தாள். எனக்கு எதுவும் புரியவில்லை. அவள் முகத்துக்கு முன் கையை ஆட்டியவாறு கேட்டேன்.

“ஹலோ..!! சுந்தரி..!! என்னங்க ஆச்சு..? ஏன் ஒரு மாதிரி ஆயிட்டீங்க..?”

அவள் பதில் சொல்லவில்லை. கூர்மையாக என் முகத்தையே பார்த்தாள். பட்டென்று தனது இரண்டு கைகளாலும் என் கன்னத்தை தாங்கி பிடித்துக் கொண்டாள். பாசமாக என் கன்னத்தை வருடியபடியே கேட்டாள்.

“அசோக்..!! எப்டிடா இருக்குற..? இத்தனை நாளா என்னை விட்டுட்டு எங்க போயிட்ட..? நீ இல்லாம நான் எப்படி துடிச்சு போயிட்டேன் தெரியுமா..?”

அவள் ஏக்கமாக சொல்லிக்கொண்டே என் கண்களை காதலாக பார்த்தாள். அவளுடைய காதலான பார்வை இதயத்தில் ஊசி பாய்ந்த மாதிரி பாய்ந்து, எதுவோ செய்தது. மனதை அப்படியே போட்டு பிசைந்தது. தடுமாறிப் போன நான், பின்பு சமாளித்துக் கொண்டு அவளுடைய தோளைப் பிடித்து உலுக்கினேன்.

“சுந்தரி.. சுந்தரி.. ப்ளீஸ்.. என்னை பாருங்க..!! என்னாச்சு உங்களுக்கு திடீர்னு..?”

அவள் தலையை ஒருமுறை குலுக்கிக் கொண்டாள். இப்போது கொஞ்சம் சுயநினைவுக்கு வந்தவள் மாதிரி காணப்பட்டாள். ஆனால் இன்னும் அதிர்ச்சி முழுவதும் விலகாமல் ஒரு மாதிரி மலங்க மலங்க விழித்தாள். நான் மெல்லிய குரலில் கேட்டேன்.

“உங்களுக்கு அசோக்குனு யாரையாவது தெரியுமா..?”

“ம்ம்.. என் அத்தை பையன்..!! என் உயிர்..!!”

“அவரை நீங்க லவ் பண்றீங்களா..?”

“ம்ம்.. சின்ன வயசில இருந்தே..!! அவர்தான் என் புருஷன்னு நெனச்சிட்டு இருந்தேன்..!!”

“இப்போ.. இப்போ அவர் எங்க இருக்காரு..?”

“தெரியாது..!! சின்னப் பையனா இருக்குறப்போவே.. வீட்ல கோவிச்சுக்கிட்டு ஊரை விட்டு ஓடிட்டாரு..!!”

“சாரி சுந்தரி..!! நீங்க நெனைக்கிற அசோக் நான் இல்லை..!!”

“ம்ம்.. தெரியும்..!!” அவள் ஒரு மாதிரி அழும் குரலில் சொன்னாள்.

“ப்ளீஸ் சுந்தரி.. அழாதீங்க..!!”

“பரவால்லை.. அவரை நெனச்சு நான் அழாத நாளே இல்லை..? என்னைக்காவது திரும்ப வந்துட மாட்டாரான்னு தெனம் தெனம் ஏங்குறேன்..!!”

எனக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. எப்படிப்பட்ட ஒரு அழகு தேவதை இந்தப்பெண்..? இப்படி ஏங்குகிறாளே..? பார்ப்பதற்கே எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது..?

“சுந்தரி..!! உங்களை ஒன்னு கேக்கவா..?”

“ம்ம்.. கேளுங்க..!!”

“இவ்வளவு பெரிய வீட்ல நீங்க மட்டும் தனியா என்ன பண்றீங்க..? உங்க சொந்தக்காரங்க யாரும் இல்லையா..?”

“இது நான் வாக்கப்பட்டு வந்த வீடு..!! சொந்தக்காரங்கன்னு யாரும் எனக்கு இல்லை..!!”

“உங்க ஹஸ்பண்ட்..? அவரு எங்க..?”

நான் கேட்டதும் அவளுடைய முகம் பட்டென்று ரவுத்திரமானது. விழிகளை விரித்து உக்கிரமாய் என்னை ஒரு பார்வை பார்த்தாள். கொஞ்ச நேரம் அவள் அப்படியே பார்த்தால் நாம் எரிந்து சாம்பாகி விடுவோம் போல இருந்தது. அந்த அளவு அதி உக்கிரமான பார்வை. எனக்கு ஜிலீர்ர்ர்.. என்று இதயக்கூட்டுக்குள் எதுவோ பாய்ந்த மாதிரி இருந்தது. அவள் ஆவேசமான குரலில் சொன்னாள்.

“அவனை பத்தி மட்டும் பேசாதீங்க..!! இந்த நேரம்.. எங்கே.. எந்த வேசியோட படுத்து கெடக்கானோ..? பாஸ்டர்ட்..!!”

அவளுடைய குரலில் ஒரு அசாத்திய ஆவேசம் தென்பட்டது. எனக்கு அது ஒருவித நடுக்கத்தை வரவழைத்தது. என்ன ஆயிற்று இவளுக்கு திடீரென்று..? நான் உடனே பேச்சை மாற்றினேன்.

“ஆமாம் சுந்தரி.. அவரை பத்தி எதுக்கு..? விடுங்க..!!”

நான் சொன்னதும் அவளுடைய முகம் பட்டென்று நார்மலுக்கு வந்தது. மீண்டும் என்னை ஒரு மாதிரி காதலும், ஏக்கமுமாய் பார்த்தாள். எனக்கு அவளுடய நடத்தை ஒருவித கிலியை ஏற்படுத்தி இருந்தது. மெல்ல சொன்னேன்.

“ஓகேங்க சுந்தரி.. நான் படுத்து ரெஸ்ட் எடுக்குறேன்..!! நீங்க உங்க ரூமுக்கு போங்க..!!”

அவள் மேலும் கொஞ்ச நேரம் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு அந்த திரி விளக்கை எடுத்துக் கொண்டாள். திரும்பி நடந்தாள். அந்த இருளில், முகத்துக்கு மட்டும் வெளிச்சம் காட்டி.. ஜல்.. ஜல்.. என்று கொலுசுகள் ஒலிக்க, நடந்து சென்றாள்.

நான் அறைக்குள் நுழைந்தேன். அந்தக்கால படங்களில் மன்னர்கள் வசிக்கும் அறை என்று செட் போட்டிருப்பார்களே..? அந்த மாதிரி பிரம்மாண்டமாய் இருந்தது. சுவரெங்கும் பெரிது பெரிதாய் ஓவியங்கள் மாட்டப் பட்டிருந்தன. ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிருந்தது. நான் ஓரமாக கிடந்த அந்த கட்டிலில் ஏறி, மெத்தையில் படுத்துக் கொண்டேன். ஜம்மென்று இருந்தது. நான் மிகவும் களைப்பாக உணர்ந்தேன். கழுத்து வேறு இன்னும் வலித்துக் கொண்டு இருந்தது. கைவைத்து கொஞ்சம் மசாஜ் செய்துவிட்டுக் கொண்டே தூங்கிப் போனேன்.

எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. என்னுடைய நெற்றியை யாரோ தடவுவது மாதிரி இருக்க, பட்டென்று விழித்துக் கொண்டேன். சுந்தரிதான் எனக்கு அருகில் அமர்ந்து என் நெற்றியை தடவி விட்டுக் கொண்டிருந்தாள். அந்த மங்கலான மெழுகுவத்தி வெளிச்சத்தில் அவளுடைய முகம், ஒருவித அமானுஷ்யத்தனமாய் காட்சியளித்தது. நான் நடுங்கும் குரலில் அவளை அழைத்தேன்.

“சுந்தரி..!!”

நான் சொன்னது அவள் காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை. ஒருமாதிரி நிலைகுத்திய பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். குளிரில் நடுங்குபவள் மாதிரி எதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். நான் காதை கூர்மையாக்கி என்ன சொல்கிறாள் என்று கவனித்தேன்.

“வந்துட்டியா அசோக்.. வந்துட்டியா..? எனக்கு குடுத்த கஷ்டம்லாம் போதும்னு.. என்னை தேடி வந்துட்டியா..? ராஜா..!! இனி உன்னை எங்கேயும் போக விடமாட்டேன்..!! என் கண்ணா..!! என்கூடதான் இருக்கணும்..!! சரியா..? சரின்னு சொல்லு..!! என்னை விட்டு போக மாட்டேன்னு சொல்லு..!! ப்ளீஸ்..!! ப்ளீஸ்..!!”

“சுந்தரி.. சுந்தரி..!! கமான்.. வேக்கப்..!!”